×

கே.எஸ்.அழகிரி அறிக்கை பிரதமர் மோடிக்கு கர்நாடக மக்கள் பாடம் புகட்டுவர்

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்ட அறிக்கை: பல்லாரியில் நடந்த பொதுக் கூட்டத்தில் பயங்கரவாதிகளிடம் காங்கிரஸ் கட்சி சரணடைந்து விட்டதாக மோடி குற்றம் சாட்டியிருக்கிறார். இந்திய மக்களை மதரீதியாகப் பிளவுபடுத்தி காவி பயங்கரவாதத்தின் மூலம் அப்பாவி மக்களை பலியாக்கியதில் பாஜவிற்கு பெரும் பங்கு உண்டு. பயங்கரவாதத்தை ஆதரித்து ஊக்கப்படுத்துகிற பிரதமர் மோடி காங்கிரசின் மீது கூறுகிற குற்றச்சாட்டை மதநல்லிணக்கத்தில் நம்பிக்கை உள்ள கர்நாடக மக்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். கர்நாடக தேர்தலில் பிரதமர் மோடியின் அவதூறு பிரசாரத்திற்கு உரிய பாடத்தை மக்கள் புகட்டுவார்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post கே.எஸ்.அழகிரி அறிக்கை பிரதமர் மோடிக்கு கர்நாடக மக்கள் பாடம் புகட்டுவர் appeared first on Dinakaran.

Tags : KS ,Karnataka ,PM Modi ,Chennai ,Tamil Nadu ,Congress ,President ,KS Azhagiri ,Congress party ,Ballari ,
× RELATED ஆட்சி செய்யாமல் காங்கிரஸ் வசூல் செய்கிறது : பிரதமர் மோடி